சாவகச்சேரியில் வீடற்ற குடும்பத்திற்கு ஜீவ ஊற்று அமைப்பினூடாக வீடு வழங்கி வைப்பு!

#SriLanka #House
Mayoorikka
1 month ago
சாவகச்சேரியில் வீடற்ற குடும்பத்திற்கு ஜீவ ஊற்று அமைப்பினூடாக வீடு வழங்கி வைப்பு!

ஐம்பதானாலும் என்ன ? எண்பதானாலும் என்ன? இப்பூமியில் உயிரோடு வாழும் வரை எம் உறவுகளை வாழ வைப்பேன் எனும் அசையா உணர்வோடு தனது ஐம்பதாவது பிறந்த தினத்திலும் மேற்கொண்ட பல்வேறு பணிகளில் ஒன்றாக புதிய இல்லமும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வாழ்வதற்கே வழியின்றி தவிக்கின்ற போதிலும் "ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பானது இப் புதிய ஆண்டிலும் தன்னுடைய உன்னதமான பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது.

 விசேடமாக நிரந்தர வீடின்றி அல்லலுறுகின்ற மக்களிற்கு நிரந்தர வீடுகளை நிர்மாணித்து கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் கடந்த 19.03.2024 அன்று ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் ஆவது இல்லமும் SQM Foundation Canada இனது ஆவது இல்லமும் பயன்பெறுநர்களிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

images/content-image/2024/03/1711289632.jpg

 இவ் இல்மானது யாழ் சாவகச்சேரி பகுதியில் பல்வேறான இன்னல்களுடன் வீடற்ற நிலையில் வாழ்ந்து வந்த குடும்பத்திற்கே வழங்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி உதவியை SQM Foundation Canada இனது ஸ்தாபகர் கமலநாதன் பாக்கியராசா அண்ணா அவர்கள் வழங்கியுள்ளார்கள். இவ் மகத்தான உதவியினை நல்கிய அண்ணனுக்கு எம் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

images/content-image/2024/03/1711289652.jpg

 அத்தோடு கூட தேவையுள்ளோர் அநேகர் எம் தேசத்தில் வாழ்கின்றதால் ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் பேருள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.

images/content-image/2024/03/1711289674.jpg