மோட்டார் சைக்களில்களை திருடி பாகங்களாக பிரித்து விற்பனை செய்து வந்த நால்வர் கைது!

மோட்டார் சைக்கிள்களை திருடி பாகங்களாக பிரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட நான்கு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அங்கு, அவர்களிடம் இருந்த 116 மோட்டார் சைக்கிள் நம்பர் பிளேட்டுகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அனுராதபுரம் ஸ்ரவஸ்திபுர, தம்புள்ளை கித்துல்ஹிதியாவ, மிரிஸ்கோனியா சந்தி மற்றும் ஹீன் மொரகொல்ல ஆகிய இடங்களில் வசிக்கும் 29 மற்றும் 44 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குழுவினர் ஏறக்குறைய 10 வருடங்களாக மேற்படி கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மோட்டார் சைக்கிள்களை திருடி பாகங்களாக பிரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட மூவரை வெலிக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களை அவிசாவளையில் இருவருக்கு கொடுத்து பாகங்களாக பிரித்து விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபரிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களில் மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள், பத்து மோட்டார் சைக்கிள்கள் விவரங்கள் வெளியிட முடியாதவை மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டவை என பொலிஸார் தெரிவித்தனர்.



