குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ள மைத்திரி! வாக்குமூலம் பெற நடவடிக்கை!
#SriLanka
#Maithripala Sirisena
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெற உள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாளைய (25.03) தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் வாக்குமூலம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்த தயாராகவுள்ளதாக முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.