2 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

#SriLanka #Colombo #Arrest #Police #drugs
Prasu
1 year ago
2 கோடி மதிப்பிலான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

சுமார் 02 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் போதைப்பொருளை கொண்டு சென்ற போது முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெமட்டகொடை - பேஸ்லைன் வீதியின் சிறிசர உயன அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், ஒருகொடவத்தை 'சப்பா' என தெரியவந்துள்ளது.

 மற்றைய சந்தேகநபரான முச்சக்கர வண்டியின் சாரதி பொரளை - சஹஸ்புர பிரதேசத்தை சேர்ந்தவராவார். பிரதான சந்தேக நபரிடம் இருந்து 1580 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!