பெரிய வெங்காயத்தின் ஏற்றுமதி தடையை நீட்டித்த இந்தியா : இலங்கைக்கு பாதிப்பு!

பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள தடையை மறு அறிவித்தல் வரை நீடிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக அளவில் வெங்காயம் இருப்பு வைக்கப்படுவதையும் நோக்கமாக கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பரில், இந்திய அரசு பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்தது, இது 31ம் திகதியுடன் முடிவடையும்.
பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஏற்றுமதியை மேலும் தடை செய்ய இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தடையால் இலங்கை அதிகளவு பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் வெங்காயத்தின் விலை பாரியளவு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



