இலங்கை வந்த வெனிசுலா பிரஜை கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து வெனிசுலா பிரஜை ஒருவர் இன்று (23.03) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரேசிலில் இருந்து டுபாய் ஊடாக அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரிடம் இருந்து கொக்கேய்ன் என சந்தேகிக்கப்படும் 132 கிராம் எடையுடைய 12 காப்ஸ்யூல்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



