வட்டவளையில் கிணறு ஒன்றில் இருந்து குழந்தையின் சடலம் மீட்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்வல தோட்டத்தின் மேல் பகுதியில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிசு காணாமல் போனதையடுத்து, வீட்டின் பின்புறமுள்ள விவசாய கிணற்றில் குழந்தையின் சடலத்தை பெற்றோர் கண்டுள்ளனர். மூன்று வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குழந்தையின் தாய் வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் உயிரிழந்த குழந்தை குடும்பத்தில் ஒரே பிள்ளை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.