சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் இன்று (21.03) தோற்கடிக்கப்பட்டது.
ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 117 வாக்குகளும் பதிவாகின. எம்.பி.க்கள் யாரும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
இதன்படி 42 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் மூன்று நாட்களாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.