சபாநாயகர்கள் ஒருபோதும் நியாயமாக நடந்து கொள்ளவில்லை - அனுர குமார!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

சபாநாயகர்கள் ஒருபோதும் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், பாராளுமன்றம் தொடர்பில் மக்களின் நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது.அதையெல்லாம் நீக்க இன்னும் 6,7 மாதங்களில் தேசியத் தேர்தல் வரவுள்ளது. எனவே நாளை சபாநாயகர் தேர்தலை நிறைவேற்றினாலும் கண்டிப்பாக அவர் வீட்டுக்குள் செல்ல வேண்டும்.
சபாநாயகர் சில சமயங்களில் அரசுக்குப் பயப்படுகிறார், சில சமயங்களில் எதிர்க்கட்சிகளைக் கண்டு பயப்படுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.



