சுங்க அதிகாரிகள் எடுத்துள்ள தீர்மானம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
எழுத்துப்பூர்வ தொழிற்சங்க நடவடிக்கையை தொடர சுங்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
சுங்கத்துறை ஊழியர்களுக்கு மேலதிக நேரத்துக்கான ஊக்கத்தொகை மற்றும் சுங்க வெகுமதி நிதியை நிதியமைச்சு கையகப்படுத்தியுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.