கோப் குழுவில் இருந்து விலகினார் தயாசிறி ஜயசேகர!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவில் இருந்து விலகியுள்ளார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்னவும் பொது விவகாரங்களுக்கான குழு அல்லது கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்து இராஜினாமா செய்திருந்தார்.
அதேபோல் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கமும் பொது வர்த்தக குழு அல்லது கோப் குழுவின் அங்கத்துவத்தில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.