இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

#weather #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் கூற்றுப்படி, நாடளாவிய ரீதியில் வறண்ட வானிலையே காணப்படுகின்றது.  

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.  

இதேவேளை, தீவின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (18.03) மேலும் அதிகரித்து அவதானம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அவதானத்திற்குரிய மட்டத்தில் காணப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.  

இதன்படி, போதியளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான பகுதிகளில் ஓய்வெடுப்பது, வெளியில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற சுகாதார ஆலோசனைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!