ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரி ஒருவர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஐஸ் போதைப்பொருளுடன் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் இருந்து 12 கிராம் அளவுள்ள 805 மில்லி கிராம் ஐஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு 5 லட்சத்தை நெருங்கும் என தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் வியாபாரியிடம் இருந்து இலத்திரனியல் தராசு மற்றும் இரண்டு வாள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேல்மாகாண ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் Operation Justice உடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



