கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதி கிரியைகள் நாளை இடம்பெறும்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பஹிவானில் உள்ள வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்ட இலங்கை குடும்ப உறுப்பினர்களின் இறுதிக் கிரியைகள் நாளை (17.03) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் பௌத்த விவகார காங்கிரஸ் இந்த நடவடிக்கைகளை ஏற்பாடு செய்துள்ளதுடன், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 01.00 மணிக்கு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பல நம்பிக்கை, பொது மக்களுக்கு திறந்த நிகழ்வாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான குடும்பத்தின் தந்தையான தனுஷ்க விக்கிரமசிங்கவும் இறுதிக் கிரியைகளில் பங்கேற்கவுள்ளார்.