பெலியத்த துப்பாக்கிச்சூடு சம்பவம் : 11 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீட்டிப்பு!
#SriLanka
#Court Order
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 11 சந்தேகநபர்கள் இன்று (14.03) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தங்காலை பிரதான நீதவான் ஹேமந்த புஸ்பகுமார சந்தேக நபர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.