முல்லைத்தீவில் திடீர் சோதனை நடவடிக்கை!
#SriLanka
#Mullaitivu
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
முல்லைத்தீவில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் எண்ணக் கருவுக்கு அமைவாக போதைப் பொருள் தேடுதல் நடவடிக்கை இன்று (13.03) முன்னெடுக்கப்பட்டது.
நாட்டில் போதைப் பொருள் பாவனையை தடுக்கும் நோக்கில் நாட்டில் பல பாகங்களிலும் சுற்றி வளைப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து மோப்ப நாயின் உதவியுடன் வீதி சோதனையை இன்றைய தினம் மேற்கொண்டிருந்தனர்.