பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் இன்றும் தொடர்கிறது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#University
Dhushanthini K
1 month ago
சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று (13.03) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.
இன்று மாலை 4.30 மணி வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்க பொது மாநாட்டின் இணை செயலாளர் கே.எல்.டி.ஜி.ரிச்மண்ட் தெரிவித்தார்.
நாட்டில் உள்ள 17 தேசிய பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்கள் பணியிலிருந்து விலகினர்.
பல்கலைக்கழகங்க ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானமே மேற்படி போராட்டத்திற்கு காரணமாகியுள்ளது.