நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும்!

#SriLanka #weather #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
நாட்டின் சில பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. 

நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.