கிழக்கு மாகாணத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு!
கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இன்று (11) ஓரளவு மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் மற்ற பகுதிகளில், முக்கியமாக வறண்ட வானிலை உள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று (10) பல பிரதேசங்களுக்கு வெப்பமான காலநிலை நிலவுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், வடமேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அநுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பமான நிலை இன்று அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.