வெப்பமான வானிலை : இலங்கைக்கு அம்பர் எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
வளிமண்டலவியல் திணைக்களம் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை காரணமாக அம்பர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
திணைக்களத்தின் அறிவிப்பின்படி, நாளைய தினம் (11.03) மேல், வடமேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களிலும் வெப்பமான வானிலையே நிலவும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
நாளை தினத்தில் வெப்பநிலையானது அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.