இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்து : மூவர் பலி!
#SriLanka
#Accident
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ரம்பேவ பிரதேசத்தில் இன்று (09) காலை இடம்பெற்ற விபத்தில் 16, 19 மற்றும் 21 வயதுடைய மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மூவரும் பிஹிம்பியகொல்லேவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
விபத்தில் சிக்கிய இரண்டு சிறுமிகளும் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரம்பேவயில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று வீதியில் பயணித்த ஐந்து பேர் மீது மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த குழுவினர் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் போது விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய கேப் அங்கிருந்து தப்பிச் சென்றது.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



