பாக்குநீரினையை கடந்து சாதனை படைத்த சிறுவனுக்கு கிழக்கு ஆளுநர் வாழ்த்து!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பாக்குநீரினையை நீந்திக் கடந்து, திருகோணமலையை சேர்ந்த 13 வயது சிறுவனான தன்வந்த் சாதனை படைத்துள்ளார்.
அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தனுஸ்கோடியிலிருந்து ஆரம்பித்த சாதனைப்பயணம் தலைமன்னாரை வந்து நிறைவடைந்தது. சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை எட்டு மணி, 15 நிமிடத்தில் குறித்த சாதனையினை தன்வந்த் படைத்துள்ளார்.
இச்சாதனையை படைத்து கிழக்கு மாகாணத்திற்கு இச்சிறுவன் பெருமை சேர்த்துள்ளார்.
இச்சிறுவன் மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.