பரேட் சட்டம் குறித்து அரசாங்கம் எடுத்த தீர்மானம் உரிய முறையில் அமுல்படுத்தவில்லை - சஜித்!
#SriLanka
#Sajith Premadasa
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
பரேட் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அந்த தீர்மானத்தை வங்கிகளுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பரேட் சட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், சொத்துக்களை கைப்பற்றும் உரிமையை வங்கிகள் பறிக்கவில்லை என தெரிவித்தார்.