வெப்பமான வானிலை தொடர்பில் நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வெப்பமான காலநிலை நிலவும் என பல மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வடமேற்கு, மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் இரத்தினபுரி மற்றும் மன்னார் மாவட்டங்களில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தப் பகுதிகளில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பம், 'கவனம்' தேவைப்படும் அளவில் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



