நாளைய தினத்திற்கு பின்னரே சாந்தனின் உடல் இலங்கைக்கு: தாயாரை பார்க்க வரவேண்டாம்: சகோதரர் வேண்டுகோள்

#India #SriLanka #Death #Tamil Nadu
Mayoorikka
1 year ago
நாளைய தினத்திற்கு பின்னரே சாந்தனின் உடல் இலங்கைக்கு: தாயாரை பார்க்க வரவேண்டாம்: சகோதரர் வேண்டுகோள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனனின் உடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குப் பிறகே இலங்கைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த தகவலை சாந்தனின் சகோதரர் தனது சமூக வலைத்தள தளத்தில் பதிவிட்டுள்ளார். தனது அண்ணாவின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படுவது வெள்ளிக்கிழமைக்குப் பிறகே சாத்தியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 மேலும், தன்னுடைய தாயை பார்க்க வருபவர்கள் இரு தினங்கள் கழித்து வருமாறும் அவர் இதற்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார்.

 இதேவேளை பிரேத பரிசோதனைகளின் பின்னர் ,இன்று சாந்தனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என இதற்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!