சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகளை கருத்தில் கொள்ளாமல் சபாநாயகர் சமூக ஊடக ஒழுங்குமுறை சட்டத்தை நிறைவேற்றியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
இதன்படி, இலங்கை நாடாளுமன்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிக்கிறது.