சுவிஸ் தூதுவரை சந்தித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!
#SriLanka
#Parliament
#Switzerland
#speaker
Mayoorikka
1 year ago
இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட் மற்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று புதன் கிழமை (28) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இந்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல்கள் குறித்து கலாநிதி சிறி வால்ட் சபாநாயகரிடம் கேட்டறிந்தார்.
ஜனாதிபதித் தேர்தல் சட்டரீதியாக கூறப்பட்டுள்ள முறைப்படி நடத்தப்படும் எனவும், அடுத்த வருடம் உரிய காலப்பகுதியில் பொதுத் தேர்தலும் நடத்தப்படும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.