இலங்கையில் தொடர்ச்சியாக தாமதமாகும் விமான சேவைகள் : தீர்வுதான் என்ன?

#SriLanka #Flight #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 months ago
இலங்கையில் தொடர்ச்சியாக தாமதமாகும் விமான சேவைகள் : தீர்வுதான் என்ன?

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் இன்று தாமதமானதாகவும், மூன்று விமானங்கள் முற்றாக இரத்து செய்யப்பட்டதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை நான்கு விமானங்கள் தாமதமானதால் இவ்வாறானதொரு நிலை உருவாகி 48 மணித்தியாலங்கள் கடக்கும் முன்னரே அங்கு பதற்றம் நிலவியமை விசேட அம்சமாகும்.  

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதனை மீளமைக்க ஐந்து நாட்கள் ஆகலாம் என கூறுகிறது. இலங்கையின் விமான தாமதங்கள் மற்றும் சில ரத்துச் சம்பவங்கள் கடந்த காலங்களில் பதிவாகியிருந்த நிலையில், சமீபத்திய சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.  

இதனால் அசௌகரியங்களுக்கு உள்ளான பயணிகள் விமான நிலைய ஊழியர்களை கடுமையாக குற்றம் சாட்டியதுடன், விமானத்தில் எலி இருந்தமையே விமான தாமதத்திற்கு காரணம் எனக் கூறப்பட்டது. 

அதேநேரம் விமான நிறுவனத்திடம் போதுமான விமானங்கள் இல்லாததே நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று இலங்கை அதிபர் கூறினார்.  

இத்தகைய பின்னணியில் நேற்று (27.02)  காலை இயக்கப்பட்ட UL121 விமானம் சென்னைக்கும், UL364 விமானம் ஜகார்த்தாவுக்கும், UL314 கோலாலம்பூருக்கும், UL189 டாக்காவிற்கும் செல்ல காலதாமதம் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இயக்கப்படவிருந்த UL265 Riyadh, UL470 Seoul, UL103 Male, UL225 Dubai மற்றும் UL229 குவைத் விமானங்களும் தாமதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதற்கிடையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சென்னை, பெங்களூர் மற்றும் அபுதாடி ஆகிய இடங்களுக்கு இன்று இயக்கப்படவிருந்த விமானங்களை ரத்து செய்தது.  

இதேவேளை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான தாமதம் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கட்டுப்படுத்த மாற்று திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அதுல கல்கெட்டிய தெரிவித்துள்ளார்.