விவசாய ஆணையாளர் நாயகத்திற்கு அமைச்சர் மஹிந்த வீரர் பிறப்பித்த உத்தரவு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் இயங்கும் "தயாரிப்பு அபிவிருத்தி மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவை" உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
காணிகளை மீட்பதற்கு திணைக்களம் பெரும்பாலும் ஆலோசனை வழங்குவதாகவும், எந்தவொரு உற்பத்திப் பணிகளையும் செய்வதில்லை எனவும் அதிகாரிகள் அமைச்சரிடம் தெரிவித்திருந்தனர்.
இதன்படி, கொள்கை ரீதியாக நெற்செய்கையை மீட்பதற்கு தடை விதிக்கப்பட்டதன் பின்னணியிலேயே குறித்த துறையை மூடுவதற்கு அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், பயிர்ச்செய்கை மற்றும் ஏற்றுமதிக்கான விஸ்தரிப்புக்கான அலகாக சம்பந்தப்பட்ட துறையை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.