பாராளுமன்ற ஜனநாயகத்தை அழிக்க விடமாட்டோம்! ஜீ.எல்.பீரிஸ்
#SriLanka
#Sri Lanka President
#G. L. Peiris
#Parliament
Mayoorikka
2 years ago
93 வருடங்களாகப் பாதுகாக்கப்பட்டு வந்த பாராளுமன்ற ஜனநாயகத்தை அழிக்க சபாநாயகருக்கு இடமளிக்கப் போவதில்லை .
பாராளுமன்ற பாரம்பரியத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க எதிர்க்கட்சிகளைப் போன்று திரள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று (26) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் கையொப்பம் எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் இன்று இடம்பெற்றதாகத் தெரிவித்த பேராசிரியர், அரசியல் சாசனத்தை மீறி இணையவழி பாதுகாப்புச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.