திக்வெல்ல – பதிகம கடற்கரையில் நீராடச் சென்ற இருவருக்கு நேர்ந்தக் கதி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

திக்வெல்ல – பதிகம கடற்கரையில் நீராடச் சென்றவர்களில் இருவர் அலையில் சிக்கி நேற்று (24.02) அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் பிரதேசவாசிகளால் பதிகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதுடன் மற்றைய நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
உயிரிழந்தவர் ரசகல - பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனவும், காணாமல் போனவர் எல்லேபொல - பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் குழுவினருடன் நீராடும்போது விபத்துக்குள்ளானது விசாரணையில் தெரியவந்துள்ளது.
காணாமற்போன நபரைத் தேடும் பணியில் தங்காலை கடற்படை அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து பொலிஸ் உயிர்காப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



