கிளிநொச்சியில் கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற இருவர் கைது!

#SriLanka #Arrest #Police #Kilinochchi #Cow
Mayoorikka
2 months ago
கிளிநொச்சியில் கால்நடைகளை வாகனத்தில் ஏற்றிச் சென்ற இருவர் கைது!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை சந்திப் பகுதியில் இரவு நேர காவல் கடமையில் ஈடுபட்ட பொலிஸாரின் வீதிச் சோதனையின் போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 7 எருமை மாடுகளை ஏற்றி வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட கப்ரக வாகனமும் அதன் வாகன சாரதி மற்றும் வாகன உதவியாளர் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

images/content-image/2023/02/1708561232.jpg

 எழு கால்நடைகளும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கால்நடை கொண்டு செல்வதற்கான கால்நடை வைத்தியர் சான்றிதழ் இன்மை மற்றும் வாகனத்தில் கால்நடைகள் ஏற்று செல்லக்கூடியவாறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை உள்ளிட்ட காரணங்களுக்காக இரண்டு சந்தேநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

images/content-image/2023/02/1708561253.jpg

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்றைய தினம் 21.02.2024 கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதாக பொறுப்பதிகாரி D.M சதுரங்க தெரிவித்துள்ளார்.