நம் ஆன்மீக பழக்கங்களில் நம்பிக்கை வைத்தால் நலனையே எதிர்பார்க்கலாம்

#spiritual #Lifestyle #habit
Mugunthan Mugunthan
2 months ago
நம் ஆன்மீக பழக்கங்களில் நம்பிக்கை வைத்தால் நலனையே எதிர்பார்க்கலாம்

நாம் ஆன்மிகத்தில் பின்பற்றும் சில பழக்க வழக்கங்கள் மேலோட்டமாக பார்க்கும்போது இவை சாதரணமானதாக் தெரியலாம். ஆழ்ந்து நோக்கினால் அதன் உண்மைப் பொருளை உணரலாம்.

இதில் சில நம்பிக்கைகள்....

  1.  நாம் வாங்கும் மளிகைப்பொருட்களில் உப்பை மாத்திரம் வெள்ளிக்கிழமை வாங்கினால் வீட்டில் செல்வம் செழிக்கும்.

  2. அஷ்டமி, நவமிகளில் துளசிச் செடியை வலமாக 3 முறை வலம் வந்து வணங்கி பின் நமது வெளிக்காரியங்களைச் செய்தால் அது கைகூடும்

  3.  பௌர்ணமி, வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் குத்து விளக்கேற்றி வழிபட்டு வந்தால் வீட்டிலே மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

  4. உப்பு, வெந்தயம், எள்ளு (கருப்பு) என்பவற்றின் சிறிய அளவை எடுத்திடித்து ஒரு வெள்ளைத்துணியில் கட்டி வீட்டின் தென்மேற்கு மூலையில் வைத்துவிட்டால் சேரவேண்டிய செல்வம் விரைவில் வந்து சேரும். இந்த வெள்ளைத்துணியை 48 நாட்களிற்கொரு முறை மாற்றிக் கொள்ளலாம்.