இறக்குமதி செய்யப்படும் தானியங்களுக்கான விசேட வரி அதிகரிப்பு
#SriLanka
#government
#Gazette
#Import
#Tax
#grains
Prasu
2 years ago
பீன்ஸ், பட்டாணி, சோளம், கௌபீ மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட சரக்கு வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானியின்படி, சிறப்பு வணிக வரி 300 ரூபாய் வரை உயர்தப்பட்டுள்ளது. இது தவிர மக்காச்சோளத்துக்கு 25 ரூபாய் சரக்கு வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சோளம், அரிசி, பச்சைப்பயறு, கௌபீஸ் மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றின் இறக்குமதியை விவசாய அமைச்சின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.