கோட்டா கோ கமவில் சூதாட்ட நிலையத்தை திறக்கும் சீன நிறுவனம்!

கோட்டா கோ கம’ அரகலய போராட்டம் நடத்தப்பட்ட காலி முகத்திடலில் கசினோ மையத்தை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தேசிய பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் ஹேரத் இன்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
அரகலய தளத்தில் சூதாட்ட நிலையத்தை திறப்பதற்கு சீன பெயரைக் கொண்ட நிறுவனமொன்றுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை (UDA) ஊடாக உரிமம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், நீர்கொழும்பில் உள்ள பிரபல சூதாட்டக்காரர் ஒருவர் இந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் பின்னணியில் இருப்பதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்த 'அரகலய தளம்' அரகலய மக்களை பழிவாங்குவதற்காக கசினோ நிலையமொன்றுக்காக வழங்கப்படுவதாகவும் அது பாரிய தவறு எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
உள்ளூர் மக்களை இலக்கு வைத்து கசினோ நிலையங்கள் திறக்கப்பட மாட்டாது, கசினோவைத் திறக்கும்போது 10 பில்லியன் செலுத்த வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
"சூதாட்ட விடுதியைத் திறப்பது எளிதல்ல. கசினோவைத் திறக்கும் போது ஆரம்பகட்டமாக ரூ.10 பில்லியன் செலுத்த வேண்டும். உள்ளூர்வாசி ஒருவர் சூதாட்ட விடுதிக்குள் நுழையும் போது, நுழைவுக் கட்டணமாக 50 அமெரிக்க டாலர்கள் செலுத்த வேண்டும், மேலும் அதை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கட்டணம் USD 200 ஆக உள்ளது. உள்ளூர்வாசிகள் சூதாட்ட விடுதிகளை ஆதரிப்பதை நாங்கள் ஊக்கப்படுத்தவில்லை. இந்த சூதாட்ட விடுதிகள் வெளிநாட்டினரை மட்டுமே இலக்காக கொண்டவை," என்று அவர் கூறினார்.



