ஆராச்சிக்கட்டுவ பகுதியில் ரயிலுடன் மோதி விபத்து : பெண் ஒருவர் உள்பட இரு குழந்தைகள் பலி!
#SriLanka
#Accident
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஆராச்சிக்கட்டுவ மையாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதியதில் பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (19.02) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் பயிற்சி வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிள் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



