ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைப்பதை போன்று தந்திரமானவர் அல்ல - அநுர குமார கருத்து!
#SriLanka
#Ranil wickremesinghe
#Tamilnews
#sri lanka tamil news
#AnuraKumaraDissanayake
Thamilini
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுவது போன்று தந்திரமானவர் அல்ல என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமாரதிஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை பிற்போட முயற்சித்தால் பதவிக்காலம் முடிவதற்குள் வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருநாகலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளதாகவும் அது மிகவும் பழைய கோஷம் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.