கொழும்பு நகரில் சிசிடிவி கேமரா மூலம் இனங்காணப்பட்டுள்ள குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை!
#SriLanka
#Colombo
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
கொழும்பு நகரில் கடந்த 15 நாட்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 793 பேர் சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சுமார் 300 பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
2023 ஆம் ஆண்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டியமை தொடர்பாக சுமார் 26,000 வழக்குகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.