பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்!
#SriLanka
#Colombo
#Hospital
Mayoorikka
1 year ago

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன வைத்தியசாலையின் சிற்றூழியர்களினால் சிறைவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வைத்தியர் அவரது அலுவலகத்தில் பணயக் கைதியாகப் பிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
அவரை மருத்துவமனையில் இருந்து உடனடியாக அகற்றக் கோரி, ஊழியர்கள் நிர்வாகக் கட்டிடத்தை முற்றுகையிட்டனர், இதனால் மருத்துவ சேவைகள் நிறுத்தப்பட்டன, செவிலியர்கள் உட்பட ஊழியர்கள் வெளிநடப்பு செய்தனர்



