ஹட்டனில் சாரதிகளுக்கு ஸ்டிக்கர் வழங்கும் விசேட நிகழ்வு!
#SriLanka
#Police
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
ஹட்டன் பிரதேசத்திலுள்ள அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு சிறுவர்களை ஏற்றிச் செல்லும் பஸ், வான் மற்றும் முச்சக்கரவண்டிகளின் சாரதிகளுக்கு அந்த வாகனங்களில் ஒட்டுவதற்கு ஸ்டிக்கர் ஒன்று இன்று (14.02) அட்டன் பொலிஸ் மைதானத்தில் வைத்து வெளியிடப்பட்டது.
ஹட்டன் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹிகமகே தலைமையில், நீதி நடவடிக்கையின் ஓர் அங்கமாக இந்த ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் 21 வாகனங்களின் சாரதிகள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் அல்ல என்பதை பரிந்துரைக்கும் வகையில் குறித்த ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.