மாற்றுத்திறனாளிகளுக்கு தற்காலிக அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தற்காலிக அடையாள அட்டையை வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து வசதிகள் மற்றும் வாக்களிக்கும் போது ஏற்படும் சிரமங்களுக்கு தீர்வாக, மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், தேர்தல் பணிக்கான அடையாள அட்டைகளை மட்டுமே வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இவ்வாறான அடையாள அட்டைகளை இரத்தினபுரி மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



