இலங்கையில் இதய நோய் தொடர்பான அறிக்கைகள் அதிகரிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#Heart
Thamilini
2 years ago
இலங்கையில் பிராந்திய ரீதியாக இதய நோய் தொடர்பான அறிக்கைகள் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
காலியில் வைத்திய நிலையமொன்றில் கலந்து கொண்ட போது சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற மருத்துவ நிலைமைகள் இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.