இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாட்டை வந்தடைந்தார் அநுரகுமார!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
#AnuraKumaraDissanayake
Thamilini
2 years ago
இந்தியாவிற்கு விஜயம் செய்த தேசிய மக்கள் படையின் தலைவர் திரு அனுரகுமார திஸாநாயக்க இன்று (10.02) பிற்பகல் நாட்டை வந்தடைந்துள்ளார்.
இதனையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் திறன் ஜனாதிபதிக்கு இல்லை எனத் தெரிவித்தார்.
இந்த ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அதற்கான பெரும் உத்வேகமும் நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
.இதன் மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதே எங்களின் நம்பிக்கை.எமக்கு சர்வதேச ஆதரவு தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.