திருகோணமலையில் கப்பல் கட்டும் தளமொன்றை அமைக்க இந்தியா யோசனை!
#SriLanka
#Trincomalee
#Tamilnews
#sri lanka tamil news
#SenthilThondaman
Dhushanthini K
1 year ago

திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை அமைப்பதற்கான யோசனை கிழக்கு மாகாண ஆளுநரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக வருகைதந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டனர்.
இச்சந்திப்பில் திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது.
திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துவதன் ஊடாக வங்காள விரிகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு அவசர நிலையின் போது விரைவான சேவைகளை வழங்க முடியும் என இந்திய பாதுகாப்பு அமைச்சின் குழுவினர் முன்ரைத்துள்ளனர்.



