முல்லேரியாவில் கழுத்தை அறுத்து நபர் ஒருவர் படுகொலை!
#SriLanka
#Murder
#Investigations
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
முல்லேரியா, வகந்த பிரதேசத்தில் நபர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையாளி யார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் வீட்டில் நேற்று (09.02) இரவு மதுபான விருந்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.