நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் - மைத்திரி!
#SriLanka
#Maithripala Sirisena
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நாட்டில் இலட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுவதாகவும் கொழும்பிலும் அவ்வாறானவர்கள் இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மூன்று வேளை சாப்பாடு ஒரு வேளை உணவு கூட கிடைக்காத மக்கள் பல பிரதேசங்களில் இருப்பதாக தெரிவித்த அவர், பொலன்னறுவை மாவட்டத்திலும் அவ்வாறானவர்கள் இருப்பதாக குறிப்பிட்டார்.
எனவே, உணவு உற்பத்தியை பெருக்குவது அவசியம் என்றும், விவசாயத்திற்கு சலுகை அளிக்காமல், உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியாது என்றும் அவர் மேலும் கூறினார்.



