பொலிஸாரின் யுக்திய நடவடிக்கை : 663 பேர் கைது!

பொலிஸாரின் யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 663 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 547 சந்தேகநபர்களும் குற்றப் பிரிவு பட்டியலில் இனங்காணப்பட்ட 116 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களிடம் இருந்து 175 கிராம் மற்றும் 191 மில்லி கிராம் ஹெராயின், 171 கிராம் மற்றும் 197 மில்லி கிராம் ஐஸ், 515 கிராம் மற்றும் 538 மில்லி கிராம் கஞ்சா, 807 கஞ்சா செடிகள், 77 கிராம் மற்றும் 200 மில்லி கிராம் மாவா, 296 மாத்திரைகள் மற்றும் 85 கிராம் மதன மோதகம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 547 சந்தேக நபர்களில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விஷேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் 04 சந்தேக நபர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பு உத்தரவின் பேரில் இரண்டு சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் இரண்டு போதைக்கு அடிமையானவர்களும் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 116 சந்தேக நபர்களில் குற்றப் பிரிவுக்குட்படுத்தப்பட்டவர்களில் 14 சந்தேகநபர்கள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும் 95 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



