வெளிநாடொன்றிற்கு பயணமானார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
#SriLanka
#Sri Lanka President
#Australia
#Ranil wickremesinghe
#Visit
Mayoorikka
1 year ago
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பெப்ரவரி 9ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பிரதான உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இந்த விஜயத்தில் இணைந்துள்ள ஜனாதிபதி, இலங்கைக்கான முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் அங்கு ஆராயவுள்ளார்.