சுற்றிவளைப்பில் சிக்கிய ஐம்பது பேக்கரிகள்!
#SriLanka
#prices
#Food
#shop
Mayoorikka
2 years ago
நுகர்வோர் விவகார அதிகாரசபை நேற்று (05) ஆரம்பிக்கப்பட்ட சோதனைகளில் சுமார் 50 பேக்கரிகள் மீது வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாணின் நிர்ணயிக்கப்பட்ட எடைக்கான வர்த்தமானி வெளியிடப்பட்டதை அடுத்து, இந்தசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பேக்கரிகள் மற்றும் கடைகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது, நிர்ணயிக்கப்பட்ட எடை மற்றும் விலையை காட்டாத சுமார் 50 பேக்கரிகள் மீது சோதனை நடத்தப்பட்டு, அந்த பேக்கரிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.