ஜனாதிபதி ரணிலின் தனிப்பட்ட இல்லம் எரியூட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது!
#SriLanka
#Colombo
#Ranil wickremesinghe
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு வேண்டி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்தனிப்பட்ட இல்லம் எரியூட்டப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் தற்போது தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.